தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை.
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் அதிகரிக்கும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை நடைபெறும் இருக்கும் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் தரிசனத்திற்காக தடையை நீக்குவதா? நீட்டிப்பதா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. தியேட்டர்களை திறக்க ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்த நிலையில், இதற்கான முடிவு 20ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், பொதுசுகாதாரத்துறை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…