#BREAKING : தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கம் – தமிழக அரசு

Default Image

தமிழக அரசின் கீழ் புதிய துறையாக இயற்கை வளத் துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் புதிய துறையாக இயற்கை வளத் துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில் துறையிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவை பிரிக்க அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்றும், துறைக்குத் தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனிதவளத் துறையிடமிருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இந்த துறையை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்