#Breaking: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி.. 527 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் இன்று மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 30 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதுவரை பாதிக்கப்பட்ட 3,550 பேரில் 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் இன்று மட்டும் 12,107 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,62,970 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 2,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்றும் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் பாதிப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று சென்னையில் மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதிகபட்சமாக விழுப்புரத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.