தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று 407 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 8731 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 805 பேரில் 93 பேர் வெளிமாநிலங்களில் வந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து வந்த 726 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று ஒரே நாளில் 11,865 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,21,480 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 50% கொரோனா வைரசால் இறப்பவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 4.21 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…