#Breaking: சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9364 ஆக உயர்வு!

Default Image

சென்னையில் ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9364 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று புதிதாய் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,128 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மொத்தமாக 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,773  பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும், 5,523 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்