தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 580 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 4,829 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 316 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கும் மொத்தம் 2,644 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 37 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,547 பேர் மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 14,195 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,02,436 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 3,822 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்து இன்று அதிகம் பாதிக்கப்பட்டதில் திருவள்ளூரில் 63, விழுப்புரத்தில் 45, பெரம்பலூரில் 33, கடலூரில் 32 என கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…