#Breaking: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000-ஐ தாண்டியது.!

Default Image

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 580 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 4,829 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 316 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கும் மொத்தம் 2,644 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 37 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,547 பேர் மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 14,195 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,02,436 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 3,822 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்து இன்று அதிகம் பாதிக்கப்பட்டதில் திருவள்ளூரில் 63, விழுப்புரத்தில் 45, பெரம்பலூரில் 33, கடலூரில் 32 என கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்