தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்று 639 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 10,548 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 827 பேரில் 117 பேர் வெளிமாநிலத்தில் இருந்துவந்தவர்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இது ஒரு நோய் உலகம் முழுவதும் உள்ளது. அதிகப்படியான பரிசோதனைகள் செய்வதால் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1,253 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 936 பேர் மஹரஸ்தாவில் இருந்து வந்தவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பிரான்ஸ் 15%, இத்தாலி 14%, இங்கிலாந்து 14% போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஒரே நாளில் 12,246 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,55,216 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 8,676 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 7 பேருக்கு பிளாஸ்மா பரிசோதனை செய்யப்பட்டு குணமடைந்து உள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…