#Breaking: சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா!

Default Image

சென்னையில் மேலும் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,313 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6,895 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 6,353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்