பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், ஊரடங்கு 15ம் தேதியுடன் முடியும் நிலையில், ஊரடங்கு நீடிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்தும் முடிவு எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…