பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், ஊரடங்கு 15ம் தேதியுடன் முடியும் நிலையில், ஊரடங்கு நீடிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்தும் முடிவு எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…