#Breaking:தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா- முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை!

Default Image

நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,பின்பற்ற வேண்டிய கொரோனா கட்டுபாடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27 ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக முதல்வர் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்