தமிழகத்தில் மீண்டும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. தமிழகத்தில் சற்று குறைந்து இருந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்தம் இதுவரை 12,684 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 1,352 பேர் குணமடைந்து உள்ளதால், இதுவரை 8,55,085 பேர் வீடு திரும்பியுள்ளார்கள்.
குறிப்பாக இன்று அதிகபட்சமாக சென்னையில் 815 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,983 ஆக உள்ளது. மேலும், இன்று 80,704 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 1,94,28,501 பேரின் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…