#BREAKING : தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு..!

Default Image

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,934 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சில புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,934 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,47,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,039 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்