சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பள்ளி மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சேலம், கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
காய்ச்சல், சளி பாதிப்பு இருந்ததால் மாணவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால், சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ஊரில் இருக்கும்போது மாணவர் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார்.
பள்ளிக்கு வந்ததும் கொரோனா உறுதியாகியுள்ளது. பள்ளி மூலம் கொரோனா பரவவில்லை. மாணவர் பயின்று வரும் பள்ளியை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு திங்கள் அன்று பள்ளி திறக்கப்படும் என கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…