#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,956 பேருக்கு கொரோனா.!

Default Image

தமிழகத்தில் இன்று மேலும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில்,கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,100 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தம் இதுவரை 48,13,147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, 52,578 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்