அயர்லாந்திலிருந்து சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மார்ச் 17ம் தேதி சென்னை வந்த மாணவர், கொரோனா அறிகுறியுடன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாணவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கப்பட்ட 21 வயது இளைஞரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே இருவரை கொரோனா தாக்கியிருந்த நிலையில், தற்போது 3வது நபரை கொரோனா தாக்கியுள்ளது. இதற்குமுன் முதல் கொரோனா தாக்குதல் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அயர்லாந்திலிருந்து சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…