தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,03,702 ஆக உயர்வு.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 26,533 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 24,418 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,03,702 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,885 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தமாக இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,57,846 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று, ஒரேநாளில் கொரோனாவுக்கு 46 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,506 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,40,979 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,08,350 ஆக உள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…