#BREAKING: தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக்தில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 29,870 லிருந்து 30,744 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,03,410 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,744 ஆக உள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்று ஒரேநாளில் 23,372 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து 28,71 535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.94 லட்சகமாக அதிகரித்துள்ளது. இன்று சென்னை – 6,452, கோயம்புத்தூர் – 3,886, செங்கல்பட்டு – 2,377, கன்னியாகுமரி – 1,266,  சேலம் – 1,080, திருவள்ளூர் – 1,069, ஈரோடு – 1,066, திருப்பூர் – 1,014 ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகபட்சமாக கண்டறியப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

6 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

7 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

8 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

8 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

9 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

10 hours ago