தமிழக்தில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 29,870 லிருந்து 30,744 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,03,410 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,744 ஆக உள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று ஒரேநாளில் 23,372 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து 28,71 535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.94 லட்சகமாக அதிகரித்துள்ளது. இன்று சென்னை – 6,452, கோயம்புத்தூர் – 3,886, செங்கல்பட்டு – 2,377, கன்னியாகுமரி – 1,266, சேலம் – 1,080, திருவள்ளூர் – 1,069, ஈரோடு – 1,066, திருப்பூர் – 1,014 ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகபட்சமாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…