சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை புள்ளி விவரத்தின் படி,தமிழகத்தில் கடந்த 26 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்படி,தமிழகத்தில் நேற்று கோவை நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக,கேரளாவில் இருந்து வந்த நான்கு மாணவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா பரவியது என்று கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதி மாணவர்கள் 570 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில்,அவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேப்பேரியில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…