#Breaking: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

Default Image

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 190 பேருக்கு இதுவரை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 190 பேரும் 19 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் டெல்லி மாநாட்டில் இருந்து தமிழகம் வந்த 1103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதி பெற்றனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர் என கூறினார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்