#BREAKING: நீதிமன்ற அவமதிப்பு – அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்!

Default Image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,  அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபராத தொகையை 2 வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்ததால் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.  சென்னை சூளை சொக்கவேல் சுப்பிரமணியர் கோயில் சொத்து வாடகை பாக்கியை வசூலிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்