#BREAKING : மாணவர்களிடையே மோதல் – செல்வா சூர்யா உயிரிழப்பு..! 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு…!

Default Image

மாணவன் செல்வா சூர்யா உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை 11-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.  

நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் செல்வ சூர்யா, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததை அடுத்து, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை 11-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்