பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும், ரூ.1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருப்பின், இது தொடர்பாக கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் தொடகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…