#BREAKING: ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித கழிவுகளை ரோபோட், நவீன இயந்திரங்களை கொண்டு அகற்றகோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் கூறியுள்ளனர்.

மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் முழுமையான பதில் மனு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டனர்.  பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு 2013-லேயே தடை விதிக்கப்பட்டது. தடை இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்கள் எடுக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. மனித கழிவுகளை இயந்திரங்களை கொண்டு அள்ளுவதற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

24 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago