கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி 47, திமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதில் குறிப்பாக கோவை தெற்கில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் 1,345 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடக்க நிலையில், கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…