#BREAKING : இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி அளிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!

இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இலங்கை பொருளாதார நெருக்கடி – தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த அக்கடிதத்தில், இலங்கைக்கு தமிழகத்திலிருந்து உதவிப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி அளிக்க, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இலங்கை மக்களுக்கு உருவாகிவரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அரசின் கோரிக்கை பற்றி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025