#BREAKING : ரூ.2,000 நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு.!

Default Image

முடிதிருத்துவோர் நலச் சங்கத்தில் பதிவு  செய்யாத தொழிலாளர்களுக்கும் தலா ரூ. 2,000 என தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி உதவிகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், முடித்திருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள 14 ஆயிரத்து 667 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் முடிதிருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாத  நபர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து,  முடிதிருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாத  நபர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. இதனால், முடிதிருத்தும் தொழில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம், பேரூராட்சி பகுதியில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம்,  நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் மண்டல அலுவலரிடம்,  மனுவாக சமர்ப்பிக்கவேண்டும்.

மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்து, பின்னர் நல வாரியத்தில்நலவாரியத்தில் பதிவு செய்யாத  நபர்களுக்கு ரூபாய் 2,000 வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident