சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின்.
திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் நாசர் தலைமையில் 34 பேர் ஸ்டாலின் தலைவராக வேண்டுமென விருப்பமனு தாக்கல் செய்தனர். இதுபோன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் ஸ்டாலின் தலைவராக வேண்டுமென விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். எனவே, 2வது முறையாக திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை அமந்தகரையில் நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின்போது, திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…