#Breaking : அதிகரிக்கும் கொரோனா ! மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை

Default Image

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 3509 பேருக்கு கொரோனா வைரஸ்உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 70,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நேற்று 2,236  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து  39,999பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

ஆனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வரும் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஆலோசனை  மேற்கொள்ள உள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்