#BREAKING : மகாகவி பாரதியார் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

மகாகவி பாரதியார் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கக் கூடிய பாரதியார் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் உடனிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்