#BREAKING : தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில், காவேரி மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது, தொற்று பாதிப்பு குறித்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில், காவேரி மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்பு நிதியுதவியுடன் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்