#BREAKING: அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

Default Image

அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை.

அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல் நாளான இன்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  ஓராண்டு ஆட்சி முடிந்த நிலையில், சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை குறித்தும் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மீதமுள்ள 19 துறைகளின் செயலாளர்களுடன் நாளையும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். அறிவுப்புகளின் நிலை, செயல்பாடு, தாமதத்திற்கான காரணம் பற்றிய கேட்டறிந்து பணியை விரிவுபடுத்தவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்