தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
சென்னையில் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் ஆணைகளை விட பெண் வாக்காளர்கள் அதிகம். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதில், இறந்த வாக்காளர்கள் 2.44 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 15.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும்,
டிச.8-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் கூறினார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…