#BREAKING : சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை- இருவரை கைது செய்த போலீசார்..!

Default Image

சென்னை பெரம்பூர் ஜே.எல். நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த மாதம் 10-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ஓர் தனியார் நகைக்கடையில் நள்ளிரவில் நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது. வழக்கம் போல கடையின் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

நள்ளிரவில் கொள்ளையர்கள் முதலில் வெல்டிங் மிஷின் கொண்டு கடையின் கதவை துளையிட்டு உள்ளே சென்ற அந்த கும்பல், நகை வைக்கப்பட்டு இருக்கும் அந்த பெட்டகத்தையும் வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகளையும், 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்களையும் திருடி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளையர்கள் கைது 

இதனையடுத்து, சென்னை பெரம்பூர் ஜே.எல். நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.  இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பெங்களூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்