#Breaking:தேர் விபத்து – ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி!

Default Image

தஞ்சாவூர் களிமேடு பகுதியில் மின்சாரம் பாய்ந்து தேர் விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அதன்படி,வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

மேலும்,விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் தடுக்க விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,தேர் விபத்தில் இறந்தவர்களுக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாகவும்,காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk