ஜனவரி 9ல் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.
வங்கக்கடலில் ஜனவரி 9-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி 9ல் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
அதன்படி, ஜனவரி 9-ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுபோன்று, ஜனவரி 10-ஆம் தேதி சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 10ம் தேதி கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் மலை பெய்யக்கூடும் என்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பனிமூட்டத்துடன் கூடிய வானிலை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…