மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது சிலரால் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இதனால்,அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் ,நண்பர்கள் என பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி,சண்முகம்,ராஜ்குமார்,அசோக் குமார் என நான்குபேர் மீது ஒரு வழக்கும் ,37 பேர் மீது 2 வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்படிருந்தது.இது தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது.
இந்நிலையில்,பணத்தை திருப்பி தந்துவிட்டதாக புகார் அளித்தவர்கள் கூறியதை அடுத்து,மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,சண்முகம், ராஜ்குமார்,அசோக் குமார் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…