தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால்,11 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.மேலும்,இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,களிமேடு தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு,பிரதமர் மோடி,அதிமுக, திமுக சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.அதே சமயம்,தஞ்சையில் தேர் சப்பரம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து,தேர் விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரிக்க வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
மேலும்,விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் தடுக்க விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,வரும் காலங்களில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில் தேரோடும் வீதிகளில் உள்ள மின் இணைப்பை புதைவடமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…