தமிழகத்தின் முதல்வரானாலும் உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது என முக ஸ்டாலின் உருக்கம்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்கவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவிலான நபர்கள் தான் இந்த விழாவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்துக்கு சென்று அவரது அறையில் முதல் கையெழுத்திட உள்ளார். அதற்காக பொதுப்பணி துறையினர், முதல்வரின் அறையின் பெயர்பலகைகள் மாற்றப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, மிகவும் சிறப்பான முறையில், தயார் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா காலம் என்பதால் எளிமையான முறையில் நடைபெறும் பதவியேற்பு விழாவை திமுகவினர் வீட்டில் இருந்தே கண்டுகளிக்க வேண்டுகிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக மீது நம்பிக்கை மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கயிருக்கிறது. உடன்பிறப்புகள் அயராத உழைப்பால் இந்த வெற்றி கிட்டியது.
உடல்நலம் முக்கியம் என்பதால் பதவியேற்பு விழாவுக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்று பேரலையாக வீசுவதால் மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது. அதனால் தான் எளிமையாக பதவியேற்பு விழா நடத்த வேண்டியுள்ளது. திமுகவின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் முன்னிலையில் பதவியேற்க முடியவில்லை என்பது எனக்கும் கவலை அளிக்கிறது.
கட்சி தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வராக பதவியேற்க தயாராகி வருகிறேன். மக்கள் அனைவரும் சம உரிமையும், கடமையும் உடைய உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம். மேலும், எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள், உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன் என குறிப்பிட்டுள்ளார்.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…