#BREAKING: நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.. இன்று டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என் ரவி.

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தாமதம்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதற்கும் காக்க வைத்துக்கொண்டிருக்கிறார் ஆளுநர்.

சமீபத்தில் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநரை சந்தித்த தமிழக அமைச்சர்களிடம், ஒப்புதல் வழங்குவதற்கான கால அவகாசத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் தமிழக அரசு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தனர். ஆளுநரின் நடவடிக்கையால் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் 27-வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்றபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பியபோது, மன்னப்பந்தல் என்ற இடத்தில் சிலர் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி பயணம் மேற்கொள்ளும் ஆளுநர் இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரிக்கை வைத்துள்ள நிலையில், டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் ஆளுநர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அடுத்த அதிரடி… பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்.!

அடுத்த அதிரடி… பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…

5 minutes ago

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

28 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

57 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago