தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக அதிக இடங்களை பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நேற்று இரவு 3 மணிநேரம் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உடன் முதல்வர், துணை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாஜக நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக சார்பில் 30 தொகுதிகள் கேட்கபட்டதாகவும், ஆனால் அதிமுக சார்பில் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…