சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அரசு அனுமதி.
சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சிக்கன் மட்டன் பிரியாணிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பீஃப் பிரியாணிக்கு அரங்கு இல்லையே ? என கேள்விகள் எழுப்பப்பட்டது.
பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் பீப் அரங்கு அமைக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். சென்னை பீஃப் பிரியாணிக்கு தனி அரங்கு அமைக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது. 3 பீப் பிரியாணி கடைகள் கேட்டுக் கொண்டதால் அனுமதி என தகவல் கூறப்படுகிறது.
அரங்கு அமைக்க விருப்பம் தெரிவித்தால், பீஃப் உணவு விற்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூரிய நிலையில், பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…