#BREAKING: செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.  வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சண்முகம் 9-ஆம் தேதியும், செந்தில் பாலாஜி 13-ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட 3 புகாரிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மத்திய குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு 3 பேரும் வெவ்வேறு தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், ஆவணங்களை தங்களுக்கு வழங்காமல் சம்மன் அனுப்பியது தவறு என்றும் இதனால் சம்மன் தொடர்பான அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

21 minutes ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

2 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

2 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

5 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

5 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

6 hours ago