#BREAKING: செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.  வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சண்முகம் 9-ஆம் தேதியும், செந்தில் பாலாஜி 13-ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட 3 புகாரிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மத்திய குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு 3 பேரும் வெவ்வேறு தேதிகளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், ஆவணங்களை தங்களுக்கு வழங்காமல் சம்மன் அனுப்பியது தவறு என்றும் இதனால் சம்மன் தொடர்பான அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

10 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

11 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago