#BREAKING: அயோத்தியா மண்டபம் – தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும்!

Default Image

அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்துவதற்கான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்திற்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தலாம். குற்றசாட்டு குறித்த ஆதாரங்களை வழங்கி, சாட்சியங்களை விசாரித்து ஆட்சேபங்களை பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த மண்டபத்தில் தினசரி பூஜை நடைபெறுகிறது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு முறையான கணக்குகள் இல்லை என்று ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் செயலாளர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் 2013-ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்து, அறநிலையத்துறை வசம் ஒப்படைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2013-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது சரியானது தான் என்று உத்தரவிட்டார். இதன்பின் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் விரிவான உத்தரவை நாளை காலை பிறப்பிக்கிறது நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்