சென்னை:அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு நடத்தக்கூடிய அயோத்தியா மண்டபம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.இதற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ராமசமாஜ் அமைப்பால் வழக்கும் தொடுக்கப்பட்டது.அந்த வழக்கில்,அயோத்தியா மண்டபம் இனி அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும்,வேறு எந்த தனிப்பட்ட அமைப்புகளும் இதில் தலையிட முடியாது எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,இதனை எதிர்த்து தொடரப்பட்ட்ட மேல்முறையீடு வழக்கில்,சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கும்,அறநிலையத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து,பக்தர்கள் தொடர்ந்து அயோத்தியா மண்டபத்திற்கு சென்று வழிபட அனுமதிக்கப்படும் என்றும்,அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளியை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.இதனையடுத்து,இந்த வழக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி இறுதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…