#BREAKING: கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு – நீதிபதி

Published by
பாலா கலியமூர்த்தி

பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு. 

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடி வருகிறார். அப்போது, இருபதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம். தேர்தல் விதிகள் திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிடில் இரு பதவிகளும் காலியாகிவிடும். தேர்தலுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு என்றும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட முடியும் எனவும் என ஓபிஎஸ் தரப்பில் பதிலளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டியதில் கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். தொண்டர்கள், நிர்வாகிகளின் கோரிக்கையால் பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது என்றும் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது எனவும் ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.

பொதுக்குழு விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டதா? என்பது குறித்து வாதங்களை முன்வையுங்கள் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை. 2 பதவிகளும் காலாவதியாகிவிட்டால், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் காலாவதியாகும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கிய வாதங்களை முன்வைத்து வரும் நிலையில், பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago