#BREAKING : மகாகணபதி நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!

Default Image

திருப்பூர் மாநகர் பகுதியில் இருக்கக்  கூடிய குமரன் சாலையில், மகாகணபதி ஜூவல்லர்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஜூவல்லர்ஸ் ஒன்று உள்ளது. திருப்பூரை பொறுத்தவரையில் இந்த நகைக்கடையில் மட்டும் தான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை 7மணி முதல் இந்த நடைபெற்று வரும் நிலையில், 5 நபர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நகைக்கடையானது எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய நகைக்கடை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நகைக்கடை எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

ஏற்க்கனவே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்