#BREAKING: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்..!

Default Image

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறது.  தனிப்படை முகாமிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி  வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க இன்று விமான நிலையங்களுக்கு  லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சாத்தூரை சார்ந்த பெண் ஒருவர் விருதுநகர் எஸ்.பி மனோகரிடம் புகார் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்