#BREAKING : தமிழ்வழி பாடப்பிரிவு நீக்கம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்..!

anna university

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்வழி பாடப்பிரிவு நீக்கம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கபடுவதாக அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாகவும், மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படும் என்றும் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது, இந்த அறிவிப்பை  திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்