#BREAKING : அதிமுக முன்னாள் எம்பி மகன்,மகள் என இருவரும் தோல்வி

Default Image
  • ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
  • அதிமுக முன்னாள் எம்பி  மகள் மற்றும் மகன் என இருவரும் தோல்வி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல்  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி.  அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா போட்டியிட்டார் .இவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமியிடம் 1343  வாக்குகள் குறைவாக  பெற்று தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் அன்வர் ராஜாவின் மகனும் தோல்வி அடைந்தார்.மண்டபம் ஒன்றியம் 16- வது வார்டில் போட்டியிட்ட  அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை திமுக வேட்பாளர் தவ்பீக் அலி தோற்கடித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்